ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 7:47 pm

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வர் தேவருக்கு 3 கோடியில் மண்டபம் கட்டபடும் என அறிவித்து உள்ளார்.

சுதந்திர போராட்ட வீரராகவும் , தமிழ் மீது பற்றுகொண்டவர், விவசாயிகளின் தோழனாக விளங்கினார். சமுதாய ஒற்றுமை , பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்ந்து காட்டியவர்.

தேவர் பிறக்கும்போது மாவீரராக பிறந்தார், வாழும் போதும் மாவீரர் வாழ்ந்தார், மறையும் போதும் போது மாவீரராக மறைந்தார் இப்போதும் மாவீரராக திகழ்கிறார் என கூறியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் நழுவி சென்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!