மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2025, 11:45 am

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலாநிதி மாறன் அவரது மனைவி காவிரி மாறன் உட்பட 7 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மிகப்பெரிய ஊடக நிறுவனமான சன் நெட்வொர்க் உரிமையாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக இந்த நோட்டீஸ் காட்டுகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு சன் டிவி செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவராக கலாநிதி மாறன் உள்ளார். கலாநிதியின் தம்பி தயாநிதி திமுகவில் மூத்த தலைவராகவும், எம்பியாகவும் உள்ளார். இவர் முன்னாள் மதிய அமைச்சராக பதவி வகித்தார்.

இதையும் படியுங்க: மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

மாறன் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட சன் டிவி, காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களிடையே பங்கு வைத்திருப்பது மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் ஏற்பட தொடங்கின.

தற்போது இது சட்டரீதியான பிரச்சனையாக மாறியுள்து. நோட்டீஸ் அனுப்பியதை Moneycontrol என்ற வணிக செய்தி ஊடகம் கூறியள்ளது. சட்டவிராத பணப்பரிவர்த்தனைகளில் கலாநிதியின் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தயாநிதி மாறன் அனுப்பியுள்ள 2வது நோட்டீஸ் என கூறப்படுகிறது. 2003ஆம ஆண்டு போடப்பட்ட Established Act பிரகாரம் கலாநிதி செயல்படவில்லை என்று தயாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் முக்கியமான நெட்வொர்க்காக செயல்படும் சன் டிவி குழுமத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கறிஞர் சுரேஷ் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இருவரும் சன் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், தயாநிதி எம்பியாக இருப்பதால் அரசு பணியில் ஈடுபடக்கூடாது என்பதால் நேரடியாக தலையிட முடியாத நிலையில் இருந்தார், பங்கு தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Sun TV caught in illegal money transfer.. Conflict in the Maran family!

முரசொலி மாறன் மறைந்த பின் கடந்த சில ஆண்டுகளாக கலாநிதி மற்றும் தயாநிதிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. சகோதாரர் மீதே நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோபாலபுரத்துக்கு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கலாநிதி டெல்லியில் முகாமிட்டுள்ளதால், தயாநிதிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என திமுகவும் உற்று நோக்கி வருகிறது. சன் டிவி பங்குகளை 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • jana nayagan single on vijay birthday வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி? 
  • Leave a Reply