தமிழின் மீதான ஆர்வமும், பற்றுமே காரணம்…தமிழ் பாடத்தில் 100க்கு 100 வாங்கிய ஒரே மாணவி நெகிழ்ச்சி!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 8:07 pm

தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமாரின் மகள் துர்கா, பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக திருச்செந்தூர் காஞ்சி சங்கர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் துர்கா என்னும் மாணவி பெற்றுள்ளார்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் செல்வ குமார் என்பவரின் மகள் துர்கா, காஞ்சி சங்கர மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம் காரணமாக தமிழை விரும்பி படித்ததாகவும், அதன் காரணமாகவே தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாகவும் மாணவி தெரிவித்தார்

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?