மண்ணுக்குள் புதைந்த ஆசிரியை… ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் : மண்சரிவால் விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 10:54 am

குன்னூரில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஆசிரியையின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை அருகே அலைசேட் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரவி.

இவரது மனைவி ஜெயலட்சுமி, 42. இவர் சாந்தி விஜய் பள்ளி ஆசிரியை. மகள்கள் வர்ஷா, வையூ. இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணியில் இருந்து கன மழை கொட்டி தீர்த்தது.

இரவு 10: 00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது. சப்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த ஜெயலட்சுமி மண்சரிவில் மண்ணில் புதைந்தார். மற்ற மூவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

தகவலின்பேரில் குன்னுார் தீயணைப்பு துறையினர் , அப்பகுதி மக்கள், வீட்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

மண்ணில் புதைந்த ஜெயலட்சுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. வருவாய் துறையினர், போலீசார், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • supreme court told that put case on who ever try to stop the release of thug life movie தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி