வீடு மொத்தமும் பறவைகள்… விசாரணையில் சிக்கிய தம்பதி : பழனி அருகே பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 1:32 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இங்கு வசித்து வரும் அறிய வகையிலான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த நிலையில் பழனி ஆவணி மூல வீதியை சேர்ந்த கணவன் மனைவியான மாரிமுத்து ,பார்வதி இருவரிடம் இருந்த பச்சை கிளிகள் 40 , முனியாஸ் பறவை 70 பிடித்து கூண்டில் அடைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வனத்துறையினர் மாரிமுத்து மற்றும் அவருடைய மனைவி பார்வதியிடம் இருந்த வன பகுதியில் வாழ் பறவைகளைகள் ,பிடிக்க பயன்படுத்திய கூண்டுகளை பறிமுதல் செய்தும் ,கணவன் மனைவிக்கு 30 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் பழனி பகுதியில் வீட்டில் கிளிகள் வளர்த்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கபடும் எனவும் பொதுமக்கள் வீட்டில் வைத்துள்ள கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!