அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் திடீர் உயிரிழப்பு.. விசாரணையில் அதிர்ச்சி : உறவினர்கள் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 10:32 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பழைய குயிலத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி (27) இவர் சேலத்தில் கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இரவு தனது சொந்த ஊருக்கு சேலம் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் செங்கம் வந்த கலைமணி செங்கம் புதிய பேருந்து நிலையம் பேருந்து வந்தடைந்த பின்னர் செங்கம் பயணிகளை இறங்கும்படி பேருந்து நடத்துனர் கூறிய போது இறங்க வேண்டிய கலைமணி இறங்காத அடுத்து உறக்க நிலையில் இருந்த கலைமணியை நடத்துனர் தட்டி எழுப்பியும் எலாததால் அவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து நடத்துனர் பயணிகளை பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டு உடனடியாக பேருந்தை செங்கம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார்

புகாரின் அடிப்படையில் கலைமணியின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கலைமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!