திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன்!!
16 August 2020, 10:01 amQuick Share
ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று மாலை திருமலைக்கு வந்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை சிறப்பு தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசித்த அவருக்கு தேவஸ்தனம் அதிகாரிகள் வேத ஆசிர்வாதங்கள் முழங்கி தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை மறுத்துவிட்டார். பின்பு தமிழகம் திரும்பினார்.