10 ஆண்டுகளாக தகாத உறவு… தனியாக இருக்கும் போது தகராறு ; கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 5:51 pm

கரூரில் கணவர் இறந்த பின்பு 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த நபருடன் வீட்டில் தனியாக இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில். கணவர் இறப்புக்கு பின் ராஜேந்திரன் (53 )என்ற நபருடன் கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரூபிதா பானுவை சந்திக்க அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது, இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.

இதில் ராஜேந்திரன், ரூபிதா பானுவை கீழே தள்ளி விட்டதாகவும், மூச்சுத்திணற அமுக்கியதோடு, கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதில் ரூபிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் ராஜேந்திரனை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கட்டை மற்றும் துணியை போலீசார் எடுத்துச் சென்றனர்.

  • adhik ravichandran salary details leaked for next film with ajith kumar அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!