பைக்கில் சென்ற இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை ; மதுரையில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
21 December 2022, 9:36 pm

மதுரையில் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர், மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக்கை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் செல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?