வெளியானது 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள்.. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் மாணவர்கள் தேர்ச்சி.. !!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 10:19 am
Quick Share

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்.

மேலும் படிக்க: அன்று ஜிஎஸ்டி அதிகாரி… இன்று போலீஸ் அதிகாரி… நடந்து சென்றவரிடம் 1.5 லட்சம் வழிப்பறி டிப்டாப் நடிகர் கைது..!!

10ம் வகுப்பு தேர்வு பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை

தமிழ் – 8 பேர்
ஆங்கிலம் – 415 பேர்
கணிதம் – 20,619 பேர்
அறிவியல் – 5,104 பேர்
சமூக அறிவியல் – 4428 பேர்

பாடவாரியான தேர்ச்சி விகிதம்

மொழிப்பாடம் – 96.85
ஆங்கிலம் – 99.15
கணிதம் – 96.78
அறிவியல் – 96.72
சமூக அறிவியல் – 95.74

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் ; வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Views: - 94

0

0

Leave a Reply