அரசு பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : குழந்தையுடன் தம்பதி பலியான சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 11:19 am

அரசு பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : குழந்தையுடன் தம்பதி பலியான சோகம்!!!

ஆர்டிசி பஸ் மீது கார் மோதி மூன்று பேர் பலி , மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். திருப்பதி-ஸ்ரீகாளஹஸ்தி பிரதான சாலையில் உள்ள ஏர்பேடு மண்டலம் மேலபாகா குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் கணவன் மனைவி மற்றும் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பேட் மாவட்டம், தல்வத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. காயமடைந்தவர்கள் திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

ஏர்பேடு சிஐ ஸ்ரீஹரி தனது ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!