தமிழகம் முழுவதும் 2வது நாளாக நீடிக்கும் ஐ.டி. ரெய்டு… கோவையில் திமுக பிரமுகர் வீடு உள்பட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை…!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 1:10 pm
Quick Share

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை ஆரம்பித்து விட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நேற்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஆறு இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம்,பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம் அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம், ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 297

0

0