திமுக அரசு சிறப்பாக செயல்பட்டுகிட்டு இருக்கு… சர்வாதிகார அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 5:14 pm

மதுரை : அரசியலமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை என்றும், சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட மத்திய தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :- இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அரசியலமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம், என்றார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!