நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தீ விபத்தில் இரு குழந்தைகளுடன் தாய் உடல் கருகி பலி.. காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலி!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 9:43 am
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில்‌ ஒரே குடும்பத்தைச்‌ சேர்ந்த 4 பேர்‌ உயிரிழந்த சம்பவம்‌ பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்பவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர் தனது மகன்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே ஊரக்கடை நடத்தி வருகிறார். மகள்களில் ஒருவரான திரவியம் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், தனது மகள்கள் ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகியோரை அழைத்து வந்து தந்தை பொன்னுரங்கனுடன் நத்தாமூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில்,‌ நேற்று நள்ளிரவில்‌ திரவியம்‌ தனது இரு குழந்தைகளுடன் வீட்டில்‌ உடல்‌ முழுவதும்‌ தீப்பற்றி எரிந்த நிலையில்‌ கிடந்தனர். இதைப்‌ பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன், அவர்களை‌ காப்பாற்றும் நோக்கில் மூச்சுத்திணறல்‌ ஏற்பட்டு, அவரும்‌ அதே இடத்தில்‌ மயங்கி விழுந்து உயிரிழந்தார்‌.

இதனால், தீவிபத்தினால் ஒரே குடும்பத்தைச்‌ சேர்ந்த 4 பேர்‌ உயிரிழந்தனர். இந்த சம்பவம்‌ அந்த பகுதியில்‌ பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல்‌ அறிந்து வந்த திருநாவலூர்‌ போலீசார்‌ சடலங்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்‌. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 318

0

0