‘பிரதமரின் தாய் தான்.. ஆனா, எதையும் எதிர்பார்த்து கிடையாது’ : பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இளையராஜா இரங்கல்!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 8:56 pm
Quick Share

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசைஞானி இளையராஜா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்று, மயானத்தில் அவரது சிதைக்கு தீ மூட்டினார். பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைகிறேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதத தாய்…! எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறேங்கும் காணமுடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 419

0

0