கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்… உத்தரகாண்டில் 3,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!!

Author: Babu Lakshmanan
21 October 2022, 10:01 am

உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி கேதர்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

3,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு சென்ற அவர், கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இதைத் தொடர்ந்து, கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அதன் பிறகு, ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு செல்லும் அவர், மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து விட்டு, பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.

மனாவிலிருந்து கணவாய் வரை, ஜோஷிமத் முதல் மலாரி வரை சுமார் 1000 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்