பயிர் காப்பீட்டுக்கு ரூ.1,775 கோடி ஒதுக்கீடு… கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத்தொகை தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 11:42 am
Quick Share

2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளாவது:-2020-21ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 2022-23ல் 155 லட்சரம் ஏக்கராக உயர்ந்துள்ளது
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.208 கோடியே 20 லட்சம் நிவாரணத் தொகை

புதிய திட்டத்தில் மண்ணுயிர் பேணி காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண்மை செயல்முறை ஊக்கப்படுத்தப்படும்
மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது ; மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு
20 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

14 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு
மண் புழு உரம் தயாரிக்க 10 ஆயிரம் விவசாயிகளுக்கும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ.6 கோடி 27 லட்சம் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு
வேம்பை பரவாக்கம் செய்யும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகம்
உயிர்ம வேளாண்மைக்கு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு
10 உழவர் அங்காடிகள் 5 கோடியில் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி ஒதுக்கீடு
நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரி நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்படும்
சீவன் சம்பா என்ற பெயரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நெல் ஆயிரம் ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்ய விதை விநியோகிக்கப்படும்
மானாவரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்

சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி ஒதுக்கீடு
சாகுபடி பரப்பு குறைந்துள்ள துவரையை கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்ய ரூ.17.5 கோடி ஒதுக்கீடு
எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.45 கோடி ஒதுக்கீடு
எள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் 25 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக பயிர் செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு
சூரிய காந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடியும், ஆமணக்கு சாகுபடியை 1,500 ஏக்கர் அளவுக்கு அதிகரிக்க ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

ஆண்டுக்கு 18.45 லட்சம் மெட்ரிக் டன் உணவு எண்ணெய் தேவை உள்ள நிலையில், ஆண்டுக்கு 4.88 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது
சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, தினை உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு ரூ.2.48 கோடி நிதியில் பயிற்சி வழங்கப்படும்

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்க்க ரூ.1 கோடி
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு
கரும்பு சாகுபடி செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.7.92 கோடி ஒதுக்கீடு
பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க மானியமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கான 2024-25ல் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
ரூ.2.70 கோடியில் தோட்டக்கலை துறை சார்ந்த தரமான நடவு செடிகள் மானிய விலையில் வழங்கப்படும்
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு
தானியங்கி மூலம் நுண்ணுர் பாசன அமைப்புகள் நிறுவ மானியம் வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு

10,000 ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ள, 7 லட்சம் தரமான தென்னை நாற்றுக்கள் விநியோகம் செய்யப்படும்”
வாழை மரங்கள் காற்றி சாய்வதை தடுக்க 3500 ஏக்கரில் கம்பு மூலம் முட்டு கொடுக்க மானியம்
ரூ.65.30 கோடியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும்
பலாப்பழங்களில் புதிய ரகங்களை 620 ஏக்கரில் பயிரிட ரூ.1.14 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சிக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு ; தென்னை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிய ரூ.12.50 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் மாவட்டங்களில் 250 ஏக்கரில் பேரீச்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்
முந்திரி வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ரூ.3.36 கோடி ஒதுக்கீடு
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.9.40 கோடி ஒதுக்கீடு
மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த பின்னேற்பு மானியமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
ஏக்கர் ஒன்று ரூ.480 வீதம் 20,833 ஏக்கருக்கு மரவள்ளி மாவுப் பூச்சி கட்டுப்படுத்தும் மானியம் வழங்க முடிவு

பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும் ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்கா அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
செங்காந்தள், மருந்து கூர்க்கன் போன்ற மூலிகைப் பயிர்கள் சாகுபடிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பவர் ட்ரில்லருக்கு ரூ.1.20 லட்சம் மானியம்
சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கு மானியத்தை வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

நெல்லை அவுரி இலை, ஒடைப்பட்டி திராட்சி, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம் புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

முன்னணி நிறுவனங்களில் விதைகளை போலியாக விற்பனை தடுக்க புதிய பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும்

Views: - 234

0

0