ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம்…! இன்றைய கொரோனா நிலவரம்..!!

Author: kavin kumar
20 February 2022, 8:52 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,051 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 949 ஆக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 15,938 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 3,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,91,011 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,980 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 223 பேருக்கும், கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும், திருப்பூரில் 40 பேருக்கும் , சேலத்தில் 33 பேருக்கும், திருவள்ளூரில் 39 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 31 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Views: - 1003

0

0