திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி ; விவசாய கடன் கொடுக்காததால் விரக்தி..!!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 4:28 pm

திருவாரூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கொடுக்காததால் விவசாயி திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் விவசாயம் செய்வதற்காக கச்சனம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று, விவசாய கடன் கேட்டுள்ளார்.

அங்கு உள்ள அதிகாரிகள் விவசாய கடன் கொடுக்க மறுத்ததால் விவசாயி மன வருத்தத்தில் அருகே உள்ள செல்போன் டவரில் கையில் திமுக கொடியுடன் ஏரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேலும் தகவல் அறிந்து வந்த ஆலிவலம் காவல்துறையினர் அவரை கீழே அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!