CM ஸ்டாலின் மாதிரி நான் இல்ல… பாட்டா செருப்பு போட்டுதான் லண்டனுக்கே போனேன் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
26 December 2022, 2:07 pm
Quick Share

சென்னை : அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று சசிகலா கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுனாமி நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், லான்ச் படகு மூலம் நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும், அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார் சிறிது தூரம் லான்ச்சை ஒட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்பும் கூட மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 10க்கும் மேற்பட்ட கேள்விகளை மீனவர்களிடம் கேட்டு அலைக்கழிப்பு செய்கின்றனர்.

புயல் கரையை கடந்த மகாபலிபுரத்தை முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை. நாங்கள் தான் ஆய்வு செய்தோம். மீனவர்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என தெரிந்து இவர்களை வச்சிக்கிறது விடியா அரசு. திமுகவின் சார்பில் இன்று காசிமேட்டில் சுனாமி தின அஞ்சலிக்கு 50 பேர் திருடர்கள் போல தான் வந்தார்கள், எனக் கூறினார்.

மீன்வளத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- அவருக்கு இந்த துறையை பற்றிய ஒன்றும் தெரியாது. அவர் ஒரு வியாபாரி. பணக்கணக்கு பார்க்கின்ற வியாபாரி தான். மக்களின் மனக்கணக்கை பார்த்து செயல்படுவதாக தெரியவில்லை. திமுக அரசின் எந்த துறைகளிலும் மக்கள் நலப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுக அலுவலக நோட்டீஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஓபிஎஸ் அவரே ஒரு டம்மி . அவர் ஒரிஜினல் கிடையாது, என்று விமர்சித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரனின் கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- பண்ருட்டி ராமச்சந்திரன் மீது நிறைய மரியாதை உள்ளது. அதனால், அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்யவில்லை. தன்னை அடையாளம் காட்டிய அதிமுகவிற்கு நான் சாகும் வரை விசுவாசம் ஆக இருப்பேன். பண்ருட்டி ராமச்சந்திரனை திமுகவின் பி டீமாக பார்க்கிறேன். ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்திற்கு எதிராக செயல்படாதீர்கள், என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறிய சசிகலாவின் கருத்திற்கு, அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யின் ஒரு உருவமாய் இருப்பவர் தான் சசிகலா, என்றும் விமர்சித்துள்ளார். பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும், பொங்கல் இல்லாத கரும்பு உண்டா என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இப்பொழுது ஆட்சியில் இருக்கும் போது ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறார். திமுக ஆட்சியில் 2 கோடி ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கினோம்.

பொங்கல் தொகுப்பு குறித்து மூத்த அமைச்சர் ஏவ வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். நிர்வாகத் திறமையற்ற அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த ஒப்புதல் வாக்குமூலமே உதாரணம். அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கம் ஒரு பொருளை கொள்முதல் செய்கிறது என்றால், அதன் தரத்தை உறுதி செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை என்றும், கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் உரிய பரிசோதனை செய்த பின்னர் பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்தால் ஏன் குறை சொல்ல போகிறார்கள்.

நிர்வாக திறமை இல்லாத அரசு என்ற ஒப்புதல் வாக்குமூலமாக தான் எ.வ வேலு பேட்டியை பார்க்கிறேன். பொங்கலை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். திமுகவின் தோழமைக் கட்சிகளே கரும்பை விநியோகம் செய்யாததற்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கரும்பு இல்லாத பொங்கல் உண்டா என்று கூறிய அவர், ஏ.வ.வேலுவுக்கு பல் இருக்கா..? இல்லையா..? என்பது தெரியவில்லை. அதனால்தான், பொங்கல் தொகுப்பில் கரும்பு வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல, ஒரே வரியில் சொல்லப்போனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் விடிய அரசின் பொங்கல் தொகுப்பு.

என்னுடைய சொத்து விவரம் முழுவதும் இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வெறும் 299 ரூபாய் பாட்டா செருப்பை அணிந்துதான் நான் லண்டனுக்கே சென்று வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று விலை உயர்ந்தவை அணியவில்லை. ஒன்றுபட்ட அதிமுக தான் தற்பொழுது இயங்கி வருகிறது, என தெரிவித்துள்ளார்.

Views: - 382

0

0