பாலியல் விவகாரம்: அழகு நடிகையிடம் அத்துமீற காரணம் இது தான் – பல வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை!

Author: Shree
25 March 2023, 3:57 pm

சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர். இந்நிலையில் திலீப் இப்படி நடத்துக்கொண்டதற்கான உண்மை காரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

பாவனாவால் தான் மஞ்சு வாரியர் திலீப்பை விவகாரத்து செய்தார் என்று கூறப்படுகிறது. இதனால் பாவனா மீது உள்ள கோபத்தில் தான் திலீப், பாவனாவை பழிவாங்க இது போன்ற செயலில் ஈடுபட்டதாக சினிமா வட்டாரங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.

  • rajinikanth not participated in madurai murugan devotees conference மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?