கள்ளத்தொடர்பில் இருந்த சன் டிவி சீரியல் நடிகர்.. கையும்களவுமாக பிடித்து புரட்டி எடுத்த மனைவி..!
Author: Vignesh20 December 2023, 10:06 am
![serials](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/12/serial-1024x560.png)
சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி மற்றும் கண்ணே கலைமானே போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்து சீரியல் வாசிகளை கவர்ந்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் இளம் பெண்களை தன் பால் கவர்ந்து வந்தார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/12/image-555.png)
2020ல் லட்சுமி நாயர் என்பவரை ராகுல் ரவி திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.
![rahulravi](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/12/rahulravimissingmain-1702463883.jpg)
கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக நாளிதழ்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு காரணம் ராகுல் ரவி வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும், மனைவி லட்சுமி நாயரிடம் கையும் களவுமாக சிக்கி போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டார். தற்போது, இந்த விஷயம் உறுதியானதால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
1
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0