நீங்கள் நலமா..? எப்படி இப்படி கேட்க மனசு வந்துச்சு..? CM ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 2:32 pm

முதலமைச்சர் ஸ்டாலினின் நீங்கள் நலமா திட்டம் தொடங்கியதை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விலைவாசி உயர்வுகளால் மக்கள் நலமாக இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த திட்டத்தை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி X தளப்பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள பதிவில், ” “நீங்கள் நலமா” என்று கேட்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!

இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!, எனக் கூறினார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…