குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகை… துறைமுகத்தில் இருந்து கப்பலுக்கு தூக்கி சென்ற தயாரிப்பு நிர்வாகி!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 1:02 pm
Savitri - Updatenews360
Quick Share

சினிமாவில் உள்ளவர்கள் நிஜத்தில் வேறு மாதிரியான முகங்கள் உடையது இயல்புதான். அதுவும் சில நடிகைகள், தங்கள் நிஜ வாழ்க்கையில் போதைக்கு அடிமையான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில், இந்திய சினிமாவின் மகாநிதி மற்றும் நடிகையர் திலகம் என்று போற்றப்பட்டவர் நடிகை சாவித்ரி.

250க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த சாவித்ரி நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் 30 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வாழ்ந்தார். தனியாக வாழ்ந்த சாவித்ரி 1981ல் மதுபோதை அடிமையாகி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்நிலையில் சாவித்ரி குடிக்கு அடிமையான போது நடந்த ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பு நிர்வாகி ஏ எல் எஸ் வீரய்யா ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஹார்பரில் மிலிட்டரி கப்பல் ஒன்றில் அரசு விழா ஒன்று நடைபெற்றது. அதற்கு நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்ள வரவேற்றிருந்தனர்.

அப்போது சாவித்ரி அங்கு வராமல் தலைக்கேறிய போதையில் இருந்துள்ளார். அவரை எப்படியாவது கூட்டிச்செல்ல வீரய்யா முற்பட்டு காரில் ஏற்றி ஹார்பருக்கு சென்றார்.

ஆனால் கப்பலில் நடிகை சாவித்ரியால் ஏறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே வீரய்யா தன் தோலில் தாங்கியபடி தள்ளாடிய சாவித்ரியை கூட்டிச்சென்றுள்ளார்.

பின் போதையில் இருந்து தெளிந்த சாவித்ரி, சமாளித்து பின் வீட்டுக்கு சென்றார் என்று கூறியுள்ளார் ஏ எல் எஸ் வீரய்யா. இந்த தகவலை பிரபல சேனலுக்கு அவர் கூறியுள்ளார், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 478

0

1