சம்பளம் கொடுக்காமல் அலையவிட்ட பிரபல தயாரிப்பாளர்… மனஉளைச்சலுக்கு ஆளான அஜித்!

Author: Shree
4 May 2023, 9:53 pm
ajith
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் ரெட் படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் அஜித்திற்கு சம்பளம் கொடுக்காமல் இன்று வா… நாளை வா என இழுத்தடித்துள்ளார்.

காரணம், ரெட் படத்தின் கதையை வேறுவிதமாக கையாண்டதால் அப்படம் தோல்வி அடைந்து அஜித்திற்கு சில நெகட்டிங் கமெண்ட்ஸ்கள் வந்ததாம். அதனால் லாபம் எடுக்காமல் சம்பளம் கொடுக்கமாட்டேன் என கூறியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர். இதனால் அஜித் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் இதுபோன்ற தயாரிப்பாளர்களின் சவகாசம் வைத்துக்கொள்வதையே அஜித் நிறுத்திவிட்டார்.

Views: - 490

0

0