என்னை கேவலப்படுத்திட்டீங்க: விஜய் படத்தில் நடித்ததிற்கு பின் SAC-யிடம் கத்திய விஜய்காந்த்..!

Author: Rajesh
4 February 2023, 12:05 pm
Vijayakanth - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் கேப்டனாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

VijayakanthUpdatenews360

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் வெற்றி திரைப்படங்கள் நிறைய அமைந்தது குறித்து அனைவரும் அறிவர். நடிகர் விஜய்யின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் அறிமுகமாகி நடித்து வந்தார். தந்தையின் படங்களால் உருவான விஜய் படங்கள் சில தோல்வியாக எஸ் ஏ சிக்கு கடன் பிரச்சனையை கொடுத்தது. அதன்பின் விஜயகாந்திடம் விஜய்க்காக நடித்து தரக்கேட்டு படத்தை எடுத்து நல்ல வெற்றியை கொடுத்தார் எஸ் ஏ சி.

SAChandrasekar_Updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் எஸ் ஏ சி பேசியபோது, விஜயகாந்தை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது, விஜய்யின் 2ம் படத்தில் நடிக்க உதவ வேண்டும் என கேட்டேன். அதற்கு உடனே பண்ணலாம் என்றும் எப்போது நடிக்கனும்-ன்னு கேட்டார். அதன்பின் ஸ்க்ரிப் எழுதி ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன். அப்போது பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்துவிட்டார். படமும் வெளியாகியது.

Premalatha- Updatenews360

விஜயகாந்த் அவர்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அதை பிரேமலதா என்னிடம் அந்த நிலத்தை கேட்டார். நான் முதலில் அதை தர மறுத்தேன். பின்னர், படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றப்பின் அந்த நிலத்தை விஜய்காந்த் அவர்களுக்கு தெரியாமல் மனைவி பிரேமலதாவிடம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தேன். அதை கொடுத்ததை அறிந்த விஜயகாந்த் கோபத்தில், என்னை கேவலப்படுத்திட்டீங்க என்று கத்தினார். நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று கூறினேன் என எஸ்.ஏ.சி உருக்கமாக கூறியுள்ளார்.

Views: - 656

9

2