நானாக சினிமாவில் இருந்து விலகவில்லை.. முதன்முறையாக நடிகை சுகன்யா ஓபன் டாக்..!

Author: Vignesh
29 March 2024, 5:25 pm
sukanya
Quick Share

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

suganya-updatenews360

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

suganya-updatenews360

இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.

suganya-updatenews360

இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

suganya-updatenews360

இந்நிலையில், திடீரென தான் சினிமாவில் இருந்து விலகியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகை சுகன்யா. அதில், அவர் கானாகீனா படத்துக்கு மலையாளத்தில் தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதைப்பற்றி யாருமே பேசல, படங்களில் நடிக்க நான் தயாராக தான் இருந்தேன். ஆனா, யாருமே என்னை அழைக்கவில்லை நானாக சினிமாவிலிருந்து விலகவில்லை என சுகன்யா பேசியுள்ளார்.

suganya
Views: - 94

0

0