அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து.. விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்டிருக்கும் போஸ்ட்..!

Author: Vignesh
10 April 2024, 6:11 pm
Dhanush-and-Aishwarya-updatenews360
Quick Share

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

Dhanush-and-Aishwarya-updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

Aishwarya Dhanush - Updatenews360

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தனர். பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று புகைப்படங்களுடன் வெளியானது. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்து இருப்பதாக திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

aishwarya

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், மகள் மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் விவகாரத்து கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

aishwarya - updatenews360

இந்த நிலையில், விவாகரத்து செய்தி வெளியான பிறகு ஐஸ்வர்யா போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால், அது விவாகரத்து குறித்து அல்ல உலக சுகாதார நாள் பற்றி தினமும் ஒன்பதாயிரம் டிப்ஸ் நடக்க வேண்டும். எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆறு நிமிட தியானம் செய்ய வேண்டும். அஞ்சு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். நாலு பிரேக் எடுக்க வேண்டும். மூன்று முறை சாப்பிட வேண்டும். தூங்கும் முன்பு இரண்டு மணி நேரம் முன்பு செல்போனை பயன்படுத்தக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், ஃபிட்னஸ் ஃப்ரீக்கான ஐஸ்வர்யா இப்படி ஒரு போஸ்ட் போட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அந்த போஸ்டை பார்த்த ரசிகர்களும் இந்த நேரத்தில் இப்படி ஒரு போஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை. விவாகரத்து வேண்டாம் தயவு செய்து தனுஷ் உடன் சேர்ந்து வாழவும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 67

0

0