வள வளனு பேசிட்டு நிறுத்துமா.. பேச்சை நிறுத்த சொன்ன பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்த அஞ்சனா..!(வீடியோ)

Author: Vignesh
9 October 2023, 6:15 pm
anjana rangan -updatenews360and
Quick Share

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்.

anjana rangan -updatenews360

தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்தும் வருகிறார் அஞ்சனா.

anjana rangan -updatenews360

இந்நிலையில், சித்தா படத்தின் வெற்றி விழாவானது சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதற்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும், அங்கு காத்திருந்து நிகழ்ச்சி தொடங்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அஞ்சுனா அங்கு வந்திருந்தார். அவர் பேச ஆரம்பித்தது முதல் சித்தா படத்தை பற்றி முழுவதுமாக பேசிக் கொண்டிருந்தார்.

chithha-updatenews360

இதனால், அங்கிருந்த கேமரா மேன்கள் போதும் நீ பேசியது என்பதாக போல கைத்தட்டி பேச்சை முடிக்கும்படி சைகை காட்டியுள்ளனர். அதன்பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு நிகழ்ச்சி விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் அஞ்சனா. அதன் பின்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்களுடன் அஞ்சனா வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

Views: - 407

1

0