சமந்தாவின் அந்த நோய்க்கு நீங்க தான் காரணமா?.. பிரபல நடிகரிடம் தரம் தாழ்ந்த கேள்வியை கேட்ட பயில்வான்..!

Author: Vignesh
26 August 2023, 6:00 pm
samantha-updatenews360 h
Quick Share

மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.

இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். மேலும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், குஷி படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்று உள்ளார். அப்போது பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமந்தாவுக்கு படத்திற்கு பின் மயோசிடிஸ் நோய் ஏற்பட்டதா இல்லை படத்திற்கு முன் ஏற்பட்டதா என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர் குஷி படத்தின் 60 சதவீத சூட்டிங் முடிந்த பிறகு சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட்டது என்று பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

திடீரென பயில்வான் சமந்தாவுக்கு மயோசிடிஸ் ஏற்பட நீங்கள் தான் காரணமா என்று கூறினார். இதற்கு விஜய் தேவர்கொண்டா பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூகம் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பத்திரிகையாளர்கள் ஏன் இப்படி தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 216

0

0