விவஸ்தை கெட்ட பொம்பள… உணர்ச்சி இல்லாத ஜென்மம் தான் இப்படி பேசும் – பிரபல நடிகையை விளாசிய பயில்வான்!

Author: Shree
1 August 2023, 12:49 pm
bayilvan
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

Rekha-Nair-updatenews360

எப்போதும் பேட்டிகளில் எதையேனும் சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கிய பிரபலமாகி வரும் ரேகா நாயர், சில நாட்களுக்கு முன்னர், ” அரைகுறை ஆடையுடன் பொதுவெளியில் அலையும் பெண்கள் குறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடுப்பு தெரிவது போல் ஆடை அணிந்து கொண்டு சென்றால் ஆண்கள் கை வைக்க தான் செய்வார்கள் அதற்கு ஏன் கோவப்பட வேண்டும் என்றும், அதை அனுபவித்துவிட்டு போக வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

bayilvan ranganathan - updatenews360.png h

ரேகா நாயரின் இந்த சர்ச்சையான பேச்சு குறித்து பயில்வானனிடம் கேட்டதற்கு, கடுப்பாகிய அவர், ” இடுப்பை தொட்டால் மட்டும் தான் ரசிக்கணுமா? இடுப்பு தொடுறதும் ஒன்னு தான்… மார்ப்பு தொடுறதும் ஒன்னுதான்… அந்தரங்கத்தை தொடுவதும் ஒன்றுதான். விவஸ்தை கெட்டது… உணர்ச்சி இல்லாத ஜென்மம் தான் இப்படி பேசும்… பெண் இனத்தையே இழிவு படுத்துவது போல் பேசும் அந்த பொம்பளையை சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரு பெண் கிழி கிழின்னு கிழிச்சி தொங்கவிட்டுவிட்டார். அந்தம்மா பீச்சில் என்கிட்டயே பார்க்கிறயா? காட்டட்டுமா? கழட்டட்டுமான்னு அசிங்கமா பேசிச்சு. அசிங்கமா பேசியே பணம் சம்பாதிக்கிற கேஸ் அவங்க என பயில்வான் ரேகா நாயரை திட்டி தீர்த்துவிட்டார்.

Views: - 809

9

3