கைவிட்ட காதல் கணவர்… குழந்தை இல்லைனு வருத்தப்பட்ட பவதாரிணி – பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Author: Rajesh
27 January 2024, 2:45 pm
ilayaraja daughter
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

bhavatharani

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது. இந்நிலையில் பவதாரிணி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில்,

பவதாரிணி சபரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்பதால் பவதாரணியை கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் பவதாரிணி தனது அப்பா இளையராஜாவுடன் மகழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது.

bayilvan-ranganathan

இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிந்து அங்கு சென்று சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். ஆனால், அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் துரதிஷ்டாவசமாக உயிரிழந்துவிட்டார் என பயில்வான் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Views: - 1454

1

0