ரஜினி பொண்ண நம்பி வாழ்க்கையே நாசமா போச்சு.. 6 மாத ஜெயில் தண்டனையில் பிரபலம்..!

Author: Vignesh
14 August 2023, 1:00 pm
Soundarya-Rajinikanth -updatenews360
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Soundarya-Rajinikanth -updatenews360

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான கோச்சடையான் படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை கொடுத்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சௌந்தர்யா ரஜினியிடம் நவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான படமான கோச்சடையானில் ரஜினியை நடிக்க வற்புறுத்தியதாகவும், இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார்.

kochadaiyaan-updatenews360

கோச்சடையான் படத்தின் பட்ஜெட் அதிகமாக சென்றதால், படத்தை எடுத்தவரை அப்படியே ரிலீஸ் பண்ணி விடுங்கள் என்று ரஜினி தெரிவித்துவிட்டார். இப்படத்திற்கு பின் மகள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று ரஜினி முடிவு எடுத்து விட்டதாகவும், இதுகுறித்து, அவரை காலா பட ஆடியோ விழாவில் பேசியிருப்பார் என பயில்வான் தெரிவித்து இருந்தார்.

kochadaiyaan-updatenews360

மேலும், கோச்சடையான் படத்தை தயாரித்தவர் முரளி மனோகர் என்பவர். இவர் வெளிநாட்டு தமிழர் இப்படத்திற்காக அபிநந்த் சாகர் என்பவர் ஐந்து கோடி ரூபாய் கடனாக முரளி மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த படத்தை முரளி மனோகரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

kochadaiyaan-updatenews360

வழக்கு தொடர்ந்த நிலையில், தீர்ப்பில் முரளி மனோகர் வட்டியுடன் ஏழு கோடி தர வேண்டும் என்றும், ஆறு மாத சிறை தண்டனை என்றும் கூறியுள்ளனர். இந்த நிலைமையில், உங்கள் மகளால் தான் முரளி மனோகருக்கு இந்த நிலைமை அதனால் ரஜினி தாராளமாக உதவி செய்யலாம் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Views: - 627

2

0