டேய்.. இவனுக்கெல்லாம் எதுக்குடா.. சாப்பாடு போடுற..? பிக் பாஸ் பிரதீப் வேதனை..!

Author: Vignesh
16 November 2023, 4:00 pm
pradeep-updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தனது முதல் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பிக் பாஸில் பிரதீப் ஆண்டனி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, அதில் தன்னுடைய முதல் படத்தில் நடிக்கும் போது தனக்கு பசி வந்ததால் தான் சாப்பிட சென்ற சமயத்தில் சாப்பாடு போடுபவர் தன்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார். நான் அந்த படத்தின் ஹீரோவெல்லாம் கிடையாது. ஆனால், ஹீரோ என்று சொல்லிக் கொள்ளலாம். அந்த சாப்பாடு போடுபவரை பொறுத்தவரையில், நான் படத்தின் ஹீரோ, எனக்கு சாப்பாடு வைக்கும் போது திடீரென புரொடக்ஷன் மேனேஜர் டே இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடற என்று கூறினார். அன்றையிலிருந்து அந்த செட்டில் நான் சாப்பிடவே இல்லை என்று கூறிய பிரதீப் ஆண்டனி உருக்குத்துடன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 164

0

0