நயன்தாரா கூட செட்டாகாது.. அந்த விஷயத்திற்காக கறார் காட்டிய தனுஷ்..!

Author: Vignesh
17 October 2023, 2:15 pm
nayanthara - updatenews360.jpg 2
Quick Share

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

nayanthara - updatenews360.jpg 2

இந்நிலையில், நயன்தாரா மற்றும் தனுஷ் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நயன்தாராவுடன் நடித்து வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு தனுஷை வைத்து குட்டி, உத்திரமபுத்திரன், சிற்றம்பலம் என தொடர்ந்து பல படங்களை மித்ரன் இயற்றினார். யாரடி நீ மோகினி கதையை மித்ரன் கூற கதாநாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். நயன்தாரா எனக்கு ஜோடியாக செட்டாகுமா திரையில் என்னை விட முதிர்ச்சியாக தெரிவாரே எனக்கூறி தனுஷ் மறுத்துவிட்டாராம்.

nayanthara - updatenews360.jpg 2

அதன் பிறகு இயக்குனர் வற்புறுத்த பின் நயன்தாராவுடன் நடித்துள்ளார். அவர்களின் கெமிஸ்ட்ரி அசத்தலாகவே இருந்தது. தொடர்ந்து இருவரும் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதுவே காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்களும் தெரிவித்து வருகின்றன.

Views: - 237

0

2