ஏஆர் ரஹ்மான் மீது ராஜ்கிரணுக்கு இவ்வளவு வெறுப்பா…? எல்லாத்துக்கும் காரணம் இசைஞானி தானாம்!

Author: Shree
27 July 2023, 7:15 am
rajkiran
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

HOLLYWOOD, CA – MAY 06: Composer A. R. Rahman attends the premiere of “Million Dollar Arm” at the El Capitan Theatre on May 6, 2014 in Hollywood, California. (Photo by Jason LaVeris/FilmMagic)

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார். அவ்வளவு ஏன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மணிரத்தினம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி சேர்ந்ததால் இளையராஜா அவர்கள் இருவருடனும் பேசிக்கொள்வதில்லை என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இளையராஜாவின் தீவிர ரசிகரும் நடிகர் ராஜ்கிரண். ராஜ்கிரணின் படங்களுக்கு பெரும்பாலும் இசைஞானி தான் இசைமைப்பாராம். அப்படி அவரது இசையில் வெளிவரும் ராஜ்கிரணின் படங்கள் மெகா ஹிட் அடிக்குமாம். அவர்களுக்கு ஒரு நல்ல நட்பும் இருந்து வந்துள்ளது. இப்படி ஒரு நேரத்தில் தான் ராஜ்கிரணின் அலுவலகத்தில் பிரபல நடிகரான எதிர்நீச்சல் மாரிமுத்து பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது ரோஜா படம் வெளியான சமயமாம் அது. அந்த படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசையை குறித்து அலுவலகத்தில் பெருமையாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தாராம் மாரிமுத்து. இதனால் செம கடுப்பான ராஜ்கிரண் இசைஞானியை தாண்டி ஒருவரை புகழ்ந்து பேசுவதா? என கோபித்து அவரை வேலைவிட்டே நிறுத்திவிட்டாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றி மாரிமுத்து கூறியுள்ளார்.

Views: - 259

0

0