விஜய் மீது செருப்பு வீச்சு… மீண்டும் நடந்த அடுத்த சம்பவம் : வைரலாகும் வீடியோ!!

Author: Vignesh
13 January 2024, 5:30 pm
Vijay - Updatenews360
Quick Share

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. GOAT படம் டைம் ட்ராவல் அடிப்படையில் தான், படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறி அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.

பொது இடங்களில் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத விஜய் முதன் முறையாக மிகவும் உணவர்ச்சிவசப்பட்டு அழுதது விஜயகாந்த் மீதுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தியது. இதற்க்கெல்லாம் காரணமும் உண்டு, ஆம் விஜயகாந்த் விஜய்யின் ஆரம்ப கட்டத்தில் அவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவிகள் செய்துள்ளார். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்திற்கு பிறகு விஜய் குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் நடிக்க விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்து அவரை ஒரு ஹீரோவாக பிரபலமாக்கினார். அதையெல்லாம் மறக்க முடியாமல் தான் விஜய் கேப்டனின் பூத உடலை பார்த்ததும் கதறி அழுதார்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, நடிகர் விஜய் மீது கூட்டத்தில் இருந்து செருப்பு வீசப்பட்டது. விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பு எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்று செருப்பு வீச்சு, இன்று விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு மாலை என கூறி தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த ரசிகர்கள் சிலர் விஜய் மீது பூக்களை தூவினார்கள். அந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Views: - 288

0

0