மாமியார் மேல் இவ்ளோவ் பாசமா? இன்ஸ்டாகிராமில் உருகிய ஜெனிலியா – வைரல் பதிவு!

Author: Shree
10 October 2023, 5:21 pm
genelia
Quick Share

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோ, போட்டோக்களைக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது மாமியாரின் பிற்றந்தநாளை முன்னிட்டு அவரை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு முற்போக்கான பெண் எப்படி இருப்பாள் என்று எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி, என்னை உங்கள் மகள் போல் நேசித்ததற்கு நன்றி, என் மராத்தியை தினமும் மேம்படுத்தியதற்கு நன்றி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக என் அத்தையாக இருப்பதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உன்னைப் போல் ஒருவருக்கும் அருள் கிடைக்காது”என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவுக்கு மாமியார் மீது இவ்வளவு பாசமா? என வியந்துவிட்டனர்.

Views: - 349

0

0