நான் ஜாலியா தான் பேசினேன்… மன வருத்தமா இருக்கு – மன்சூர் அலிகான் வேதனை!

Author: Shree
23 November 2023, 8:10 pm
mansoor
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

mansoor ali khan -updatenews360

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதாவது லியோ படத்தில் வில்லனான என்னை திரிஷாவை கற்பழிக்கவே விடல… காஷ்மீர் பணியில் அவரின் பஞ்சு மேனி பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.

திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு அவரை கற்பழிக்கும் சீன் பண்ணனும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு என்றெல்லாம் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசி ஒட்டுமொத்த திரையுலத்தையே தலைகுனிய வைத்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பலதரப்பினர் கடும் கண்டனம் தெரிவிக்க அவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என பலர் கொந்தளித்தனர்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேட்டியளித்துள்ள மன்சூர் அலிகான், நான் ஜாலியாக தான் பேசினேன். ஆனால், அதை திரிஷா தவறாக புரிந்துக்கொண்டார். நான் அப்படி பேசியதால் திரிஷா மனவருத்தம் அடைந்திருந்தால் நானும் மனவருத்தம் அடைகிறேன். இதற்காக சிலர் நான் தலைமறைவாக இருப்பதாக பொய் செய்தி பரப்பிவிடுகிறார்கள். அதனால் தான் நான் இப்போது ஆஜர் ஆகினேன் என பேசியுள்ளார். ஆனால், இதற்கு முன்னர் மன்சூர் அலிகான் என் வீடியோவை எடுத்து நான் பேசியது போல் யாரோ சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என தடாலடியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 259

0

0