அன்பு மகளே…. இளையராஜாவின் உருக்கமான பதிவு – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Author: Rajesh
26 January 2024, 9:08 pm
bhavatharani
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

bhavatharani

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பவதாரிணியின் உடல் சொந்த ஊராக தேனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. நாளை தேனி பண்ணை புரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது.

தொடர்ந்து பவதாரணியின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மகள் பவதாரணியுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு அன்பு மகளே! என மிகுந்த உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Views: - 350

0

0