என் மேல கை வச்சி பாரு… வளர்ப்பு மகள் விவகாரம் குறித்து ஷகீலா காட்டம்!

Author: Rajesh
26 January 2024, 8:19 pm
shakeela
Quick Share

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

அண்மையில் நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் அடித்து தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியது. இது குறித்து ஷீத்தல் பேட்டியில் கூறியதாவது, ஷகிலா தினமும் குடித்து விட்டு வந்து போதையில் தன்னை அடித்து உதைப்பார். அதனால் தான் நான் பதிலுக்கு அடித்தேன் என்றார். பின்னர் அதற்கு பதில் அளித்த ஷகிலா, என் வளர்ப்பு மகள் ஷீத்தல் தனது பெற்ற தாயுடன் இணைந்து எனது சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டி மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலா, சமீபகாலமாக என்னை பற்றி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் ஷகீலாவால் நடக்க கூட முடியவில்லை என்றெல்லாம் தகவல் வெளிவந்தது. யாராச்சும் என் மேல கை வைக்க முடியுமா? வச்சுதான் பாருங்களேன்…. இந்த ஷகிலாவை அடிக்க முடியுமா? ஏன் இப்படி பொய்யான செய்திகளெல்லாம் எழுதுறாங்கன்னு தெரியவில்லை என்று ஷகிலா என கோபத்துடன் பேசினார்.

Views: - 288

0

0