அவ என்ன பெரிய கற்புக்கரசியா?.. பிரபல நடிகையை கண்டபடி பேசிய பயில்வான்..!

Author: Vignesh
18 March 2024, 10:52 am
bayilvan-ranganathan
Quick Share

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

தமிழ் சினிமாவில், சமீப காலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. இவர், படத்தில் நடிப்பதை தாண்டி பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கி இணையதளத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அப்படி, நடிகர் மன்சூர் அலிகான் ரேப் சீன் த்ரிஷாவுடன் இல்லை என்று கூறியது முதல் ஏவி ராஜு என்ற அரசியல் பிரமுகர் கூவத்தூருக்கு த்ரிஷா 25 லட்சம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார் என்பது வரை மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி பேசியபோது, பயில்வான் ரங்கநாதன் விமர்சித்த சம்பவம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான் ரேப் சீன் இல்லை என்று பேசிய போது, த்ரிஷா விஜய் சிரிச்சாங்க, மடோனாவுடன் காட்சியில்லை என்று கூறிய போது கூட எதுவும் பேசவில்லை.

கற்புக்கரசிகள், கண்ணகி வாரிசுகள், கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா? எத்தனை அசிங்கமான ரேப் சீன் அந்தரங்க ஆட்டம் போட்டிருக்கிறீர்களே, தமன்னாவுடன் ஒரு ஷார்ட் கூட வைக்கவில்லை, வருத்தமாக இருக்கு என்று சூப்பர் ஸ்டார் சொன்னார். அப்போது, தெரியவில்லையா? அது மட்டுமா இரண்டு குதிரையில் சவாரி பண்ணுவியா என்று ஒரு நடிகர் கூறினார்.

bayilvan ranganathan

அப்போதும் தெரியவில்லையா? ஒரு இயக்குனர் தன் மனைவி விபச்சாரியாக நடிக்க வைத்து படத்தை ஓட்டினார். அப்போதும், தெரியவில்லையா சினிமாவை எல்லோரும் டீசண்டாவா எடுக்கிறீர்கள் என்றும், சினிமா ஒரு வியாபாராம் என்று படுமோசமான பேசியிருந்தார்.

Views: - 72

0

0