அவரால் நான் பட்ட கொடுமை… அது மட்டும் இல்லன்னா என் இரங்கல் செய்தி வந்திருக்கும்!

Author: Shree
19 October 2023, 12:00 pm
d imman sivakarthikeyan
Quick Share

கடந்த இரண்டு நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.

எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இமான் அந்த பேட்டியில்… சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என கூறியது தான் அண்டர்லைன் செய்து பேசுகிறார்கள்.

இதனால் உண்மையிலே சிவகார்த்தியன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து இமான் பேசும்போது ஒரு வித பதற்றம், வருத்தம் , வலி உள்ளிட்டவை அவரது வார்த்தைகளில் காண முடிகிறது. மேலும் பேசிய இமான்… நீங்கள் இப்படி யோசித்து பாருங்க… நீங்கள் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது உங்களின் அன்பான மனைவி மற்றும் உங்களின் குழந்தைகள் இல்லையென்றால். அவர்கள் இனி உங்கள் வாழ்க்கையில் திரும்பி வரவே மாட்டார்கள் என்ற சூழ்நிலையில் குடும்பமாக வாழ்ந்த வீட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வளவு வலி இருக்கும்?

நான் உண்மையிலே அந்த நரகவலியை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் இந்த இசையும், கடவுள் நம்பிக்கையும் எனக்கு இல்லை என்றால் இந்நேரம் என்னுடைய இரங்கல் செய்தியை பார்த்திருப்பீர்கள். என் மனைவி எனக்கு செய்த துரோகத்தினால் என்னுடைய குழந்தைகளையும் நான் பிரிந்து இருக்கிறேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளார் இமான். இமான் உண்மையிலே நல்ல மனிதர். அவரது பேச்சில் 100% உண்மை தெரிகிறது. அவருக்கு துரோகம் இழத்தவர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் நல்லாவே இருக்கமாட்டாங்க என மக்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவாக பேசி கருத்து கூறியுள்ளனர்.

Views: - 499

1

2