என் வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியதே வடிவேலு தான் – பிரபல நடிகர் ஆதங்கம்!

Author: Shree
27 May 2023, 6:37 pm
kadhal sugumar
Quick Share

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான காதல் சுகுமார் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். காதல் சுகுமார், காதல், விருமாண்டி, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் அட்ரஸ் இல்லாமல் போயிட்டார். அவர் கூறியதாவது, என் வாழ்க்கையை நாசாமாக்கியதே வடிவேலு தான். ஆம், இங்கிலீஷ்காரன், சச்சின், ஆறு போன்ற படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவருடன் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு கூறியதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது. இதனால் நாளடைவில் நான் அடையாளம் தெரியாமல் போய்விட்டேன் என சுகுமார் தெரிவித்துள்ளார்.

Views: - 657

2

3