போனது போனது தான்.. – கணவரின் பிரிவால் பிரியங்கா எடுத்த திடீர் முடிவு..!

Author: Vignesh
22 March 2024, 2:24 pm
Priyanka Nalkari - updatenews360
Quick Share

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்..

Priyanka Nalkari - updatenews360

இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்

இந்நிலையில், புதுமுக நடிகர்களை கொண்ட இந்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதாராமன் என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இடையில் நீண்ட நாள் கழித்து காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

Priyanka Nalkari - updatenews360

இந்த நிலையில், அதன்பின்னர் மீண்டும் சீரியலில் நடித்துவரும் பிரியங்கா திருமணமாகி ஒரு வருடமாகிய நிலையில், கணவரை பிரிந்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது. தன்னுடைய கணவர் புகைப்படங்களை டெலிட் செய்திருந்த பிரியங்கா தற்பொழுது முக்கிய ஒரு அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதாவது, அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலக இருப்பதாகவும், அந்த கணக்கை டெலிட் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Priyanka Nalkari - updatenews360

எனக்காக ஒரு சிலர் ப்ரோமோஷன் செய்ய சாரீஸ், ஜுவல்ஸ் என அனுப்பி இருக்கிறீர்கள். எனக்கு அவர்கள் அளித்ததை டிஎம் செய்யுங்கள். அதை திருப்பி அனுப்பி விடுகிறேன் என்றும், இனி நான் நெகட்டிவ் விஷயத்தில் இருந்து விலகி இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். ஏன் இந்த எடுத்தார் என்றும் கணவரை பிறந்து விட்டதால் தான், இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 101

0

0