டிமிக்கி கொடுத்த கணவர்.. ரோஜா சீரியல் பிரியங்காவின் விவாகரத்துக்கு இதுதான் காரணம்..!

Author: Vignesh
17 February 2024, 4:37 pm
priyanka nalkari
Quick Share

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்..

Priyanka Nalkari - updatenews360

இந்த தொடரில், கதாநாயகியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு, ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்

இந்நிலையில், புதுமுக நடிகர்களை கொண்ட இந்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. பின்னர், பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதாராமன் என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இடையில் நீண்ட நாள் கழித்து காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

Priyanka Nalkari - updatenews360

இந்த நிலையில், திடீரென அவர் இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் வெளியிட்ட புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளார். அதோடு, லைவ் வந்த பிரியங்காவிடம் நீங்கள் சிங்கிளா என ஒரு ரசிகர் கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். இதனால், அவர் திருமணம் செய்த ஒரு வருடத்தில் தனது கணவரை பிரிந்துள்ளது தெரிய வந்தது.

Priyanka Nalkari - updatenews360

முன்னதாக பிரியங்கா நல்காரின் கணவர் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இதுதான் தற்போது அவர்கள் பிரிவிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது, இவர் நளதமயந்தி என்ற புது சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதலர் தினத்தன்று கூட அவர் தனியாக தான் வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் கணவரை பிரிந்தது உறுதியாகி உள்ளது.

Views: - 156

0

0