கழுத்தை நெரித்த கடன்… லட்ச கணக்கில் வட்டி – அப்படிமட்டும் நடிக்கமாட்டேன் – பிரபல நடிகர் கெடுபிடி!

Author: Rajesh
16 February 2024, 2:15 pm
rajkiran
Quick Share

கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.

rajkiran-updatenews360

தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.

கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்ற ராஜ்கிரண் வில்லன் வேடத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.

Rajkiran -Updatenews360

எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரை அணுகியும் அது மட்டும் முடியவே முடியாது என கறாராக கூறிவிட்டாராம். காரணம் மக்கள் மத்தியில் கெட்டவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி தற்போது வரை வில்லன் வேடங்களை மறுத்து வருகிறார். கடன் கழுத்தை நெரித்து மாச மாசம் லட்ச கணக்கில் வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் இவருக்கு எதுக்கு இந்த வறட்டு கெளரவம்? என கோலிவுட்டில் அவரை பலர் விமர்சித்து முணுமுணுத்தார்களாம்.

Views: - 217

0

0