ஆப்பு வச்சிட்டாரா சூப்பர் ஸ்டார்…? ”சமூக வலைதளத்தில் இருந்து விலகும் ரத்தினகுமார்!

Author: Shree
2 November 2023, 1:10 pm
rathinakumar
Quick Share

நடிகபிர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், இயக்குனர் ரத்தினகுமார் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ரத்தினகுமார், ” நான் சின்ன வயசில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகன். மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் எழுதியபோதே உண்மையிலே நெய்வேலியில் ரைட் வந்துவிட்டார்கள். இப்போ லியோ படத்தின் ” நா ரெடி தான் வரவா” பாடல் வெளியானதும் எவ்வளவு பிரச்சனை கிளம்பிவிட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

விஜய் மற்றவர்கள் போன்று இல்லை. அவர் மிகவும் தாழ்மை குணம் கொண்டவர். யாரையும் நிற்கவைத்து பேசவே மாட்டார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எப்போதும் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். அவருக்கு எல்லோருமே சரிசமம் ஆனவர்கள். எனவே “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்று ரத்ன குமார் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரத்தினகுமாரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையாக சாடியதால் ரத்தினகுமார் திடீரென ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளார். ஆம், அவர் சமூக வலைதளத்தில் இருந்து விலகியிருக்கப்போகிறேன் என அறிவித்துள்ளார். ரஜினியை பார்த்தும், ரஜினி ரசிகர்கள் கொடுத்த அழுத்தத்தை பார்த்து பயந்தும் இந்த முடிவெடுத்திருப்பதாக நெட்டிசன்ஸ் மீண்டும் ரத்தினகுமாரை விளாசித்தள்ளியுள்ளனர்.

Views: - 198

1

0