யாருக்கு அந்த இடத்தில் முடி இருக்கும்.. போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த சமந்தா..!

Author: Vignesh
4 March 2024, 12:13 pm
samantha
Quick Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமந்தா நடிப்பில் வெளியான சகுந்தலம் திரைப்படம் பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது.

samantha - updatenews360

அதையடுத்து தற்போது பாலிவுட்தில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக, சமந்தா தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் படுக்கையறை காட்சியிலும் அங்கங்களை தொடும் காட்சியிலும் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை முகம் சுளிக்க வைத்தார். அது தான் விவாகரத்துக்கு காரணமாகவும் அமைந்தது.

samantha - updatenews360Samantha

இதனிடையே, சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர்சிட்டி பாபு, சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், தன்னுடைய உடல் நிலை கூறி அனுதாபத்தை பெற கண்ணீவிட்டு சமந்தா பிரமோஷன் செய்கிறார் என்று தெரிவித்து இருந்தார். மேலும், நடிகை சமந்தா முன்னாள் கணவரை பிரிந்ததை பற்றியும் படுமோசமாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விசயத்தை தெரிவித்து இருக்கிறார்.

samantha - updatenews360

அதில், அந்த தயாரிப்பாளர் காதில் முடி இருப்பதை வைத்து, காதலில் யாருக்கு அதிகமாக முடிவளரும் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன் என்றும், ஹாரோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டு இருந்தார் சமந்தா. இப்படி அவரின் விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி கொடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

samantha - updatenews360Samantha

Views: - 89

0

0