பலான படத்தில் சமந்தா…. கேட்டதை விட அதிகமா கொட்டிக்கொடுத்த தயாரிப்பாளர் – எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
15 June 2023, 9:56 am
samantha
Quick Share

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். குறிப்பாக சமந்தா படு கவர்ச்சியான ரோல், படுக்கையறை காட்சிகளில் யோசிக்காமல் தாராளமாக நடித்து சர்ச்சை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா Citadel என்ற இந்தி வெப் தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் பிரபல பாலிவுட் இளம் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் படுக்கையறை காட்சிகள், நெருக்கமான லிப் லாக் சீன் உள்ளிட்டவை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக சமந்தா எதிர்பார்த்ததை விட அதிகமான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்து அவரை திருப்பதி படுத்தியுள்ளாராம். ஆம், Citadel தொடரில் நடிக்கும் சமந்தாவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுத்துள்ளார். இது அவர் வழக்கமாக வாங்கும் சம்பள பணத்தை விட அதிகம் என செய்திகள் கூறுகிறது.

Views: - 361

1

0